ஊராட்சி தலைவரை நிரந்தரமாக பதவிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு.

by Editor / 10-02-2023 10:14:56pm
ஊராட்சி தலைவரை நிரந்தரமாக  பதவிநீக்கம் செய்து  ஆட்சியர்  உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆணைக்காரன்சத்திரம் கிராம ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகளை 25.02.2022 அன்று வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆய்வுகுறிப்பின்படியும், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அவர்களால் 25.03.2022 அன்று மேலாய்வு மேற்கொள்ளப்பட்டதில், அரசு விதிமுறைகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்களால் 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205-இன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தமிழ்நாடு அரசிதழ் எண்.6 பகுதி 4 பிரிவு 2 நாள்:08.02.2023 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சிமன்றதலைவர் ஆ.கனகராஜ் என்பவர் ஊராட்சிமன்ற தலைவர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via