காதலிக்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு காதலனும் தற்கொலை

by Staff / 10-05-2022 12:52:08pm
காதலிக்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு காதலனும்  தற்கொலை

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொதலகூரு மண்டலம் தாடிபத்திரி  கிராமத்தை சேர்ந்தவர்கள் மாலபாட்டி சுரேஷ் ரெட்டி மற்றும் காவியா ரெட்டி.  மாலபாட்டி சுரேஷ் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில் காவியா புனே பகுதியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் காவியாவை சில ஆண்டுகளாக மாலபாட்டி சுரேஷ் ரெட்டி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக இரண்டு பேரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்த நிலையில்  மாலபாட்டி சுரேஷ் ரெட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து காவியாவின் பெற்றோர்களிடம் தனது பெற்றோரை அனுப்பி பெண் கேட்டார்.

காவியா சுரேஷ் ரெட்டியை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து காவியா பெற்றோர் சுரேஷ் ரெட்டி பெற்றோரிடம் பலமுறை பெண் கேட்டு வந்த நிலையிலும் விருப்பம் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் காவியா பெற்றோர் வரன் பார்த்து வருவதை அறிந்த சுரேஷ் இன்று மத்தியம் துப்பாக்கியுடன் காவியாவின் வீட்டுக்கு சென்று காவியா மீது சுட்டார். முதல் தோட்டா தவறிய நிலையில் இரண்டாவது தோட்டா காவியா உடலில் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.
 
இதைத்தொடர்ந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற சுரேஷ் ரெட்டி காவியா வீட்டிற்கு 100 மீட்டர் தொலைவில் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று காவியாவை மீட்டு பொதலகூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வழியிலேயே காவியா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி அருகிலிருந்த துப்பாக்கியை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். சுரேஷுக்கு துப்பாக்கி எப்படி எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இளைஞர் ஒரு தலையாக காதலித்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெற்றோர்கள் உறவினர்கள்  கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 

 

Tags :

Share via