லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக  ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி  நியமனம் 

by Editor / 10-06-2021 04:55:19pm
லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக  ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி  நியமனம் 



தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குனராக காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் டிஐஜி அந்தஸ்தில் இருக்கும் பெண் அதிகாரி லட்சுமி லஞ்ச ஒழிப்புத்துறையில் துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு 1 தேர்வில் தேர்வுப்பெற்று டிஎஸ்பியாக பதவியில் அமர்ந்தார். பின்னர் எஸ்பியாக பதவி உயர்வுப்பெற்றார். ஐபிஎஸ் அதிகாரியாக நிலை உயர்த்தப்பட்ட இவர் சமீபத்தில் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக பதவி வகித்தார்.
பின்னர் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via