பிரசவத்துக்கு சென்ற பெண் உள்ளிட்ட  3 பேர் விபத்தில் உயிரிழப்பு 

by Editor / 10-06-2021 05:11:50pm
பிரசவத்துக்கு சென்ற பெண் உள்ளிட்ட  3 பேர் விபத்தில் உயிரிழப்பு 



கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த  தொழிலாளி கண்ணன் (30). இவரது மனைவி 26 வயது ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்து விட்டது. இந்த நிலையில், இரண்டாவதாக ஜெயலட்சுமி கர்ப்பம் தரித்துள்ளா நிறைமாத கர்ப்பிணியான ஜெயலட்சுமிக்கு,  பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 புதுப்பட்டி கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ்-ல்  ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகிய மூவரும் ஏறினார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர் கலியமூர்த்தி, உதவியாளர் தேன்மொழி, செவிலியர் மீனா ஆகிய 3 பேர் என மொத்தம் 6பேர் புதுப்பட்டு கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் புறப்பட்டனர். இவர்கள் பயணம் செய்த 108 ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் இடையிலுள்ள அரி பெருமானூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஆம்புலன்ஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார் செல்வி நாத்தனார், அம்பிகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்

 

Tags :

Share via