கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

by Staff / 10-05-2022 01:05:18pm
 கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

 
சேலம் ஆத்தூர் அருகே உள்ள வீரகனூர் இருந்து தம்மம்பட்டி வரையிலான சாலை விரிவாக்க பணிக்காக 7 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டது. 

இதனை சேலம் வீரகனூர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் டெண்டர் எடுத்துள்ளார். அதற்கான ஆணையைப் பெறுவதற்கு 80 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டும் என்று சேலம் ஆத்தூர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளர் சந்திரசேகர் லஞ்சமாக கேட்டுள்ளார். 

இதற்கு முன்பணமாக 3.5 லட்சம் பணம் கொடுக்க வரும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக  பிடித்துள்ளனர்.

அதனடிப்படையில் சேலம் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆத்தூரில் உள்ள உதவி பொறியாளர் சந்திரசேகரனுக்கு தலைமை அதிகாரியாக கண்காணிப்பு பொறியாளர் உள்ளதால் அவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

 

Tags :

Share via