2024 தேர்தலுக்குப் பிறகு  திமுகவை நீங்கள் இனி எங்கு தேடினாலும் கிடைக்காது  பிரதமர் மோடி சூளுரை

by Editor / 28-02-2024 04:47:33pm
2024 தேர்தலுக்குப் பிறகு  திமுகவை நீங்கள் இனி எங்கு தேடினாலும் கிடைக்காது  பிரதமர் மோடி சூளுரை

நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் அவர் பேசும்போது, நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் வணங்கி எனது உரையை தொடங்குகிறேன் என அவர் பேசத்தொடங்கினார்.
திருநெல்வேலி மக்கள் அனைவரும் திருநெல்வேலி அல்வா மாதிரி இளகிய மனம் கொண்டவர்கள் நேற்று திருப்பூரில் மதுரையில் இருந்தேன். எனக்கு திருநெல்வேலி வர நல் நல்ல பாக்கியம் கிடைத்துள்ளது 
வயதானவர்கள் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் ஏழைகள் நடுத்தர மக்கள் நடுத்தர மக்கள் என எந்தப் பிரிவினராக இருந்தாலும் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் தமிழக மக்களின் இந்த நம்பிக்கையை பாஜக காப்பாற்றும் நமது உண்மையான சமூக நீதி நேர்மையான அரசியலை அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நம்பிக்கையை முழுவதுமாக பாஜக நிறைவேற்றும் என்ற உறுதியை இன்று திருநெல்வேலியில் உங்கள் முன் வைக்கிறேன் இது மோடியின் உத்தரவாதம்,தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வருங்காலத்தை எதிர்காலத்தை பற்றி மிகத் தெளிவுடன் இருப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் அவர்களது தொழில்நுட்ப அறிவியல் சிறந்தவர்களாக இருப்பார்கள் இதுதான் தமிழகத்தை பாஜகவுடன் நெருக்கமாக வைத்திருக்க உதவுகிறது.

 பாஜகவின் அணுகுமுறையும் தமிழக மக்களின் எண்ணமும் ஒத்துப் போகிறது எதிர்காலத்தை நோக்கிய பாஜகவின் சிந்தனையும் மக்களின் சிந்தனையும் ஒன்று படுவதால் தமிழக மக்களுக்கு பாஜகவின் மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது இதுபோல் இந்தியா வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது எரிசக்தி துறையில் வெளிநாட்டுடன் இந்தியாவும் போட்டியிட்டு முன்வருகிறது புதுப்பிக்க எரிசக்தியில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
 அந்த வளங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறது இந்த நாடு புதிய சிந்தனையோடு செயல்படுகிறது தமிழ்நாடு இந்த புதிய சிந்தனையின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்க போகிறது.

நீங்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போது அங்கு அவர்கள் உங்களை என்ன மரியாதையோடு பார்க்கிறார்கள் என்ற பார்வையில் இந்தியர்களை அவர்கள் வியப்போடும் மரியாதையோடும் பார்க்கிறார்கள் தானே அந்த பெருமை தமிழக மக்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது உலகில் உள்ளவர்கள் 

இந்தியாவை இவ்வளவு  பெருமையாக பார்க்கிறார்கள் என்பது மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி இந்த மாற்றம் நிலையான உறுதியான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் என்பதை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்து அதன் பின்னே வர தொடங்கி இருக்கிறார்கள்.

நான் யோசித்துப் பார்க்கிறேன் இப்போதுதான் முதல்முறையாக டெல்லிக்கும் தமிழ்நாட்டுமக்களுக்கும் இடையே உள்ள தூரம் மிகவும் குறைந்துவிட்டது நெருக்கமாக வந்து விட்டோம், இன்றைக்கு ஏழைகள் விவசாயிகள் பெண்கள் இளைஞர்கள் ஒவ்வொருவருக்குமான திட்டத்தின் பலன்களும் தமிழ்நாட்டின் மூளை முடுக்கெல்லாம் தென் தமிழக மக்களுக்கு எல்லாம் சென்று கிடைத்திருக்கிறது இதுதான் பாஜக அரசு எப்படி செயல்படுவதற்கு என்பதற்கான ஒரு நல் சாட்சியாக இருக்கிறது 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் கிராமப்புற வீடுகளில் இருந்த குடிநீர் குழாய் திட்டம் 21 லட்சமாக இருந்தது ஆனால் நமது அரசு ஒரு கோடி வீடுகளுக்கு மேல் கிராமப்புறங்களில் குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்துள்ளோம், வீட்டில் தண்ணீர் இல்லாமல் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது நமக்கு தெரியும் ஒரே ஒரு குடிநீர் குழாய் இல்லாமல் ஏழைப் பெண்கள் பட்ட அவஸ்தையை சொல்ல முடியாது ஆனால் இந்த குழாய் நாம் கொடுத்தவுடன் அவர்களது வாழ்க்கை சுலபமாக இருக்கிறது இதே போல் உஜ் வலா திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது 
இதன் மூலம் புகையில் இருந்தும் சமைக்கும் துன்பத்திலிருந்தும் பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது நமது தாய்மார்கள் சகோதரிகள் வாழ்க்கையில் மிகப் பெரிய நன்மை கிடைத்துள்ளது அதனால்தான் நான் செல்கிற பக்கம் எல்லாம் இத்தனை தாய்மார்கள் பெண்கள் திரளாக வந்து எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். 

நமது பாரத தேசம் நூறு மடங்கு முன்னேற்றம் அடைந்தால் தமிழ்நாடு இணையாக 100 மடங்கு முன்னேற வேண்டும் இது மோடியின் உறுதிமொழி அதனால் தான் 10 ஆண்டுகளில் தமிழகத்திலும் மதுரையில் எய்ம்ஸ் திறக்கிறோம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இலவச சிகிச்சை பெறுகிறார்கள்.

 இப்போது தமிழ்நாட்டின் நலனுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் எங்களுக்கு ஒத்துழைப்பை கொடுக்காத ஒரு அரசாங்கம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் ஒரு குறை சொல்கிறார்கள் அதை மீறி மக்களுக்கு நாங்கள் நன்மை செய்து கொண்டிருக்கிறோம். 

நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் இவர்கள் ஏன் நாட்டின் வளர்ச்சியை தருகிறார்கள் திட்டங்களை ஏன் தடுக்கிறார்கள் மக்களின் நலனை தடுக்க வேண்டும் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் இந்த மாநில அரசுக்கு நினைக்கிறது என்று நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் நீங்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் நாட்டை கொள்ளை அடிப்பதற்காகவே வளர்ச்சியை தடுக்கின்றனர்.
 
ஆனால் உங்கள் மோடி அதை நடக்க விட மாட்டார் அதை தடுத்து நிறுத்துவார், இரும்பு கரம் கொண்டு தடுப்பார், அந்த கொள்ளை முயற்சி தடுக்கப்படும். தமிழ்நாட்டிற்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்கள் நான் அயோத்தியில் பிறப்பதற்கு முன்பு தனுஷ்கோடி கோயில்களுக்கு எல்லாம் சென்று ஆசீர்வாதம் பெற்று தான் அயோத்தி ராமரை திறந்தோம் மொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்தது. 


ஆனால் பாராளுமன்றத்தில் உங்கள் திமுக வெளியிடப்பு செய்தார்கள் அதை அவர்களால் ஏற்க முடியவில்லை, அவர்கள் இதன் மூலம் உங்கள் நம்பிக்கையை அவர்கள் எதிர்க்கிறோம், என்பதை நிரூபிக்கிறார்கள் அவர்கள் வெறுப்பு அரசியலை பரப்புகிறார்கள் ஒரே குடும்பம் தனது குடும்ப வளர்ச்சியை தவிர மாநிலத்தின் வளர்ச்சியை பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கிறார்கள். 

ஆனால் பாஜக அப்படியில்லை உங்களை நேசிக்கிறோம் என்பதற்காக தான் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு தலித் குடிமகனை உங்கள் பிள்ளையை நாங்கள் மத்திய அமைச்சராக்கி இருக்கிறோம் அதுவும் பொறுக்காமல் இந்தி வேற தமிழ் வேற என்று பேசுகின்றனர். ஹிந்தி பேசும் மத்திய மாநிலத்திலிருந்து அவருக்கு ஒரு எம்பி பதவியும் மறுபடி கொடுத்துள்ளோம். 


இதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் ஏனென்றால் எங்களுக்கு நாடு மக்கள் தான் முக்கியம் இது வலிமையான பாரதம் அபிநந்தன் பாகிஸ்தான் பார்டரில் விமானத்தில் விழுந்த போது ஒரு கீறல் கூட இல்லாமல் நாங்கள் அழைத்து வந்தோமா..? இல்லையா...?என கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் ஐந்து மீனவர்களுக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களுக்கு தண்டனை கிடைத்ததா..? நாங்கள் அவர்களை மீட்டு விட்டு வரவில்லையா.. அரசியலை எல்லாம் திருத்த வேண்டிய காலம், இந்த அரசுகளை மாற்ற வேண்தியகாலம், திமுக பொய் வேஷம் போடுகிறது, திமுக பிரித்தாலும் சூழ்ச்சி செய்கிறது, இதை நாம் தெளிவாக பார்க்க முடிகிறது. ஆனால் இனிமேல் திமுகவை பார்க்க முடியாது இனிமேல் திமுக  இருக்க முடியாது. ஏனென்றால் இங்கு அண்ணாமலை வந்துவிட்டார் அண்ணாமலை இருக்கிறார் இனிமேல் திமுகவை நீங்கள் எங்கள் தேடினாலும் கிடைக்காது காசு பணம் சம்பாதிக்க உங்கள் நம்பிக்கையை உங்கள் மொழியை உங்கள் இனத்தை சிறுபான்மைப்படுத்தி கேவலப்படுத்தி அந்த நம்பிக்கையை கெடுக்கின்ற திமுக முற்றிலுமாக இங்கிருந்து அகற்றப்படும். என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

Tags : பிரதமர் நரேந்திர மோடி nellai

Share via