பெரம்பூரில் தனது MLA அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்
சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை.13) தனது சொந்த தொகுதியான சென்னையில் உள்ள பெரம்பூருக்கு முதன்முறையாகச் சென்றுள்ளார். அங்கு, தனது புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சற்றுமுன் திறந்து வைத்தார். தொடர்ந்து தவெகவின் கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்திய பின், அவர் அலுவலகத்தின் உள்ளே சென்று தனது இருக்கையில் அமர்ந்தார். இதையடுத்து அங்குள்ள இ-சேவை மையத்தையும் திறந்துவைத்த முதலமைச்சர், ஊழியர்களிடம் பணிகள் குறித்து உரையாடினார்.
Tags :


















