பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியுமா........

by Staff / 27-05-2022 04:16:45pm
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியுமா........

கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் உள்ள ஆரூற்றுப்பாறை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்ததால் பிரவீனா ரக்ஷிதா ஆகிய இரு மாணவிகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத முடியாமல் வீட்டில் முடங்கினர், 

மாணவிகளின் கல்வி பாதிக்காமல் இருக்க ஜூன் மாதம் நடைபெறும் மறு தேர்வில் பொது தேர்வு எழுதி தங்களது கல்வியை தொடர அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நவாசுதீன் தகவல்,

தொடர்ந்து கிராமப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை சீனிவாசன், விஜய் ஆகிய இரு கும்கி யானைகளைக் கொண்டு விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது...

 

Tags :

Share via