2 கொலை வழக்கின் குற்றவாளிகள் ஆறு  பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

by Editor / 26-06-2024 11:49:34pm
2 கொலை வழக்கின் குற்றவாளிகள் ஆறு  பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையபகுதியான மாறாந்தையில் பேச்சி குட்டி என்பவர் கொலை வழக்கின் குற்றவாளிகளான மாறாந்தை வடக்கு தெருவை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகனான ஜெயராமன்(27) மற்றும் முத்தையா என்பவரின் மகனான ஆறுமுகம் (47) மற்றும் ஊத்துமலை காவல் நிலைய பகுதியில் கள்ளத்தொடர்பய் கண்டித்த நடராஜன் என்பவர் கொலை வழக்கின் குற்றவாளிகளான மலையாங்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் வெங்கடேஷ்(22), வீரவநல்லூர் நைனார் காலனி சேர்ந்த வேல்முருகன் என்பவரின் மகன் வேனு(21), வெள்ள பாண்டி என்பவரின் மகன் நகுல்(21) மற்றும் கன்னியாகுமரி மாங்காட்டுவிளை செல்வராஜ் என்பவரின் மகன் அனீஸ் ராஜ்(30) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்  பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி ஆறு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags : 2 கொலை வழக்கின் குற்றவாளிகள் ஆறு  பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

Share via