அவ்வையார் படத்துக்கு ஆளுநர் மரியாதை

by Staff / 09-03-2024 02:08:48pm
அவ்வையார் படத்துக்கு ஆளுநர் மரியாதை

உலக மகளிர் தினத்தையொட்டி ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள் அவ்வையார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ‘பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ என்ற கருப்பொருளுடன் உலகம் முழுவதும் உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்ப்புலவர் அவ்வையாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகேஅலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு ஆளுநர் ஆர். என். ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.தமிழக அரசின் சார்பில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவ்வையாரின் சிலைக்கு அருகே அவரது படத்துக்கு அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், பி. கே. சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via