சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பில் வாதம்

by Staff / 09-03-2024 02:06:49pm
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் தரப்பில் வாதம்

சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது அல்ல என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.கடந்த 2006-10 காலகட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தபோது ரூ. 44. 59 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை விடுவித்துஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பை, மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார்.

 

Tags :

Share via