நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த17 பேர் பலி..? 

by Editor / 30-10-2023 11:42:29pm
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த17 பேர் பலி..? 

நைஜீரியாவில் நேற்று 29 ஆம் தேதி ம;லாய் 3.30 மணியளவில்  ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. தாராபா மாநிலத்தின் அர்டோ - கோலா மாவட்டத்தில் பெனு நதியில் ஒரு படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். விபத்தின் போது படகில் 100 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது. காணாமல் போன 73 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மீன் மார்க்கெட்டில் இருந்து திரும்பும் போது இந்த சோக சம்பவம் நடந்ததாக தேசிய அவசர சேவைகள் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2023 வரை, நாடு முழுவதும் 61 படகு விபத்துக்களில்  குறைந்தது 901 உயிர்கள் பலியாகியுள்ளன.இந்த பேரழிவுகளுக்கான மூல காரணங்களை கண்டறியுமாறு சட்ட அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை நிறுவனங்களுக்கு ஜனாதிபதி போலா அகமது டினுபு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்த விபத்துக்கள் நடப்பதற்கு திறமையான பயிற்சிபெற்ற படகு இயக்குபவர்கள் இல்லாததும்,அனைத்து படகுகளிலும் லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்குதல், கப்பல்களின் வழக்கமான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் படகு நடத்துபவர்களுக்கான விரிவான பயிற்சி திட்டங்கள் எதுவுமே இல்லாததால் இந்த விபத்துநடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் படகில் பயணித்த17 பேர் பலி..? 

Share via