நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி - மனோ தங்கராஜ் கேள்வி

by Staff / 11-03-2024 02:04:30pm
நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி - மனோ தங்கராஜ் கேள்வி

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு பதில் சொல்வதா? இல்லை பாஜக விற்கு அடி பணிவதா? என பதிவிட்டுள்ளார். மேலும், அவர் அந்த பதிவில், பொய் சொல்லாதீங்க மோடி என்ற ஹாஷ் டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via