சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 23 ஆண்டு சிறை

by Staff / 13-03-2024 11:56:13am
சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு 23 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்சோ வழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஹாஜிப்பேட்டை பகுதியை சேர்ந்த சையத் காசீம் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று மலைப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போக்சோ வழக்கு பதியப்பட்டது.

 

Tags :

Share via

More stories