சாம்பார் தர மறுத்ததால் உணவகத்தின் மேற்பார்வையாளர் அடித்துக் கொலை

by Staff / 13-03-2024 11:53:58am
 சாம்பார் தர மறுத்ததால் உணவகத்தின் மேற்பார்வையாளர் அடித்துக் கொலை

சென்னை, பம்மலில் பார்சல் வாங்கும்போது கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் தனியார் உணவகத்தின் மேற்பார்வையாளரை தாக்கி கொலை செய்த தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். உணவக மேற்பார்வையாளர் அருணை கையால் தாக்கியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். கொலை செய்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கூடுதல் சாம்பார் தர மறுத்ததால் கொலை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via