செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஜூலை 24-க்கு ஒத்திவைப்பு

by Staff / 22-07-2024 03:03:20pm
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு ஜூலை 24-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் (ஜூலை 24) ஒத்திவைத்துள்ளது. இதுவரை 9 முறை வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை கோரியுள்ளது. அதனால், இம்முறை வழக்கை ஒத்திவைக்கக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்பு வாதமிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் வாதாடுவதற்கு சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை ஜூலை 24-ம் தேதிபிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via