விசாரணை கைதி உயிரிழப்பு - SI-க்கு ஏழு ஆண்டுகள் சிறை

by Staff / 22-07-2024 03:00:46pm
விசாரணை கைதி உயிரிழப்பு - SI-க்கு ஏழு ஆண்டுகள் சிறை

கள்ளச்சாராய வழக்கில் 2013ஆம் ஆண்டு கோபி என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த விசாரணையின் போது கோபி பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் தரப்பில் போலீஸ் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், காவல் ஆய்வாளர் முரளிதரன், எஸ்.எஸ்.ஐ. உமா சங்கர், எஸ்.எஸ்.ஐ. இன்பரசன் ஆகிய மூவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via