கள்ளச்சாராயத்தை ஒழிக்காத திமுக அரசு: டிடிவி தினகரன் சாடல்

by Staff / 19-06-2024 03:17:37pm
கள்ளச்சாராயத்தை ஒழிக்காத திமுக அரசு: டிடிவி தினகரன் சாடல்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் எக்ஸ் தள பதிவில், “கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் அருந்திய நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய காவல் அதிகாரிகளும் அரசு நிர்வாகமுமே முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திறனற்ற திமுக அரசால் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இனியாவது இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via