தஞ்சையில் அரசு பெண் ஊழியரிடம் நூதன மோசடி

by Staff / 23-09-2022 03:17:26pm
தஞ்சையில் அரசு பெண் ஊழியரிடம் நூதன மோசடி

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையை சேர்ந்தவர் அரசு பெண் ஊழியர் இவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு தவணைகளாக ரூபாய் 90 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது இதனால் அதிர்ஷ்ட அடைந்த அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அந்த பெண் ஊழியரின் கிரெடிட் கார்டு மற்றொரு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்ததும் அதனால் தான் அவருடைய வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது உடனே போலீசார் அந்த வங்கி கணக்கையும் முடக்கி அந்த அரசு பெண் ஊழியர் எழுந்து ரூபாய் 90877 ரூபாயை மீட்டனர் இதையடுத்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அரசு பெண் ஊழியரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via