மிட்டாய் கடைக்குள் புகுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மகன்

by Admin / 27-04-2024 01:36:38pm
மிட்டாய் கடைக்குள் புகுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மகன்

மிட்டாய் கடைக்குள் புகுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மகன் மற்றும் கடை ஊழியர்கள் விபத்து சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது ரமேஷ் என்பவர் தனது தாயாருடன் கோவில்பட்டி மாதாங்கோவில் சாலையில் டாடா கிரியேட்டா காரில் சென்று கொண்டு இருந்தார் அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில்  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் ஒருவர்  மீது மோதி  அருகே இருந்த சமுத்திர பாண்டி என்பவருக்கு சொந்தமான மிட்டாய் கடைக்குள் புகுந்தது.. அவ்வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போக்குவரத்து காவல்துறை  மேற்கு காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.. இதனைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த ரமேஷ் இடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த  ஊழியர்கள் காரை ஒட்டி வந்த தாய் மகன் என விபத்தில்  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்க பட்டது.

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் காரை  அகற்றினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார் இவ் விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

 

மிட்டாய் கடைக்குள் புகுந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மகன்
 

Tags :

Share via