பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

by Staff / 18-10-2022 05:26:16pm
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியை கேரளா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் ரசித்தனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இந்த போட்டியை கேரளா மாநிலம் கோட்டயம் அருகே உள்ள கஞ்சிக்குழியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வருபவருமான அருண் எம் தாமஸ் (வயது 35) பார்த்து ரசித்தார்.

அருண் எம் தாமஸ், மைதானத்தில் பணியில் இருந்த பெண் போலீசிடம் அவர் சில்மிஷம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்தரங்க உறுப்புகளை தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸ் அவரை திட்டி பிடிக்க முயன்றார். அப்போது அவரது கைகளை இறுக்கமாக பிடித்து திருக்கிவிட்டு அருண் எம் தாமஸ் அங்கிருந்து ஓடினார்.

இதனை பார்த்த பிற போலீசார் விரட்டி சென்று அருண் எம் தாமஸை விரட்டி சென்று பிடித்தனர். மேலும் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் எம் தாமஸ் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (பெண்ணை அடக்கி தாக்குதல்), 353A (உடல் தொடர்பு சார்ந்த பாலியல் தூண்டடலில் ஈடுபடுதல்), 332 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via