ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அறிக்கையின்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்-உதயநிதி

கரூரில் ஏற்பட்டதைப்போல விபத்து இனிமேல் ஏற்படக்கூடாது, அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தபின் பேசிய அவர், 'இது ஈடு செய்யமுடியாத இழப்பு. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்புக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியாது. பிற மாவட்டங்களில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு துணை நிற்கும்.
பொதுக்கூட்டத்திற்கு வருபவர்கள் மரத்தில் ஏறாதீர்கள், பொது மக்களுக்கு இடையூறாக இருக்காதீர்கள் என கட்டுப்படுத்துகிறோம். அதற்கு மேல் கட்டுப்படுத்துவது கட்சியின் இரண்டாம் தலைவர்கள் பொறுப்பு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், பொதுக்கூட்டத்திற்கு தலைவர்கள் உரிய நேரத்திற்கு வரவேண்டும் என்றவர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்என்றார்.
Tags : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அறிக்கையின்படி முதல்வர் நடவடிக்கை எடுப்பார்-உதயநிதி