உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

by Editor / 15-09-2024 05:32:28pm
உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 30 பேர் உத்ரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற போது நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு உத்ரகாண்ட் அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ளனர்.

 

Tags : உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுனர்

Share via