பங்காரு அடிகளார் சமாதியில் இபிஎஸ் அஞ்சலி

by Staff / 28-10-2023 11:51:36am
பங்காரு அடிகளார் சமாதியில் இபிஎஸ் அஞ்சலி

பங்காரு அடிகளார் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் கடந்த 19ஆம் தேதி காலமானார். அவருடைய லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவிடத்தில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அங்கு வருகை தருகின்றனர்.

 

Tags :

Share via