இளம்பெண் தீகுளித்து தற்கொலை..

by Staff / 20-11-2023 05:26:28pm
இளம்பெண் தீகுளித்து தற்கொலை..

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பாத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாத்தம்பாளையம் ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். இவரது மனைவி, சுமதி. கடந்த 10ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சுமதி, மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.சுமதியின் அலறல் சத்தம்கேட்டு, உறவினர்கள் அவரை மீட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுமதி, 18ம் தேதி இறந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via