அவதூறு வழக்கில் அப்பாவு-வுக்கு சம்மன்

by Editor / 07-08-2024 12:37:55pm
அவதூறு வழக்கில் அப்பாவு-வுக்கு சம்மன்

அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் பேசிய கருத்துக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

Tags :

Share via