திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகளுக்கு ஜாமின் இன்றுவிசாரணைக்கு வருகிறது.

by Editor / 31-01-2024 10:03:11am
திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகளுக்கு ஜாமின் இன்றுவிசாரணைக்கு வருகிறது.

பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் சித்ரவதை செய்தது தொடர்பான, ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், எம்எல்ஏ மகன் ஆண்டோ மதிவாணனின் வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கொடுமைப் படுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் அளித்திருந்தார். கைது செய்யப்பட்ட எம்எல்ஏவின் மகன், மருமகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகளுக்கு ஜாமின் இன்றுவிசாரணைக்கு வருகிறது.

Share via