சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

by Staff / 19-03-2024 11:49:20am
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழிசை சவுந்திரராஜன் பாஜக வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதால் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

 

Tags :

Share via

More stories