மாதவிடாய் வலி தாங்க முடியாமல் சிறுமி தற்கொலை
மும்பையைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கு சமீபத்தில் முதல் முறையாக மாதவிடாய் வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். மாதவிடாய் குறித்த புரிதல் இல்லாததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாதவிடாய் குறித்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags :