சிறுமி பாலியல் வன்கொடுமை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by Staff / 01-04-2024 04:23:02pm
சிறுமி பாலியல் வன்கொடுமை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே கடந்த 2022 ஆம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அப்பகுதியில் வசித்து வந்த முதியவர் சோலையப்பன் (53) மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சோலையப்பன் மீது குற்றம் உறுதியான நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via