கொத்து கொத்தாக கரை ஒதுங்கும் திமிலங்கள்

by Staff / 22-09-2022 03:40:16pm
கொத்து கொத்தாக கரை ஒதுங்கும் திமிலங்கள்

ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் கொத்து, கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில், பாதி திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via