சிக்கன் ரைஸையில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை

by Staff / 03-05-2024 11:42:20am
சிக்கன் ரைஸையில்  பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகவதி (20) என்ற இளைஞர் தனது வீட்டிற்கு சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்றுள்ளார். பூச்சி மருந்து கலந்திருந்த அந்த ரைஸை சாப்பிட்ட அவரது தாயார் மற்றும் தாத்தா சண்முகநாதன் (72) ஆகியோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சண்முகநாதன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில், கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் தாத்தாவுக்கு பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸை கொடுத்து பேரன் கொன்றது தெரியவந்தது.
 

 

Tags :

Share via