இன்ஜினியர் வீட்டில்65 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை

by Admin / 06-05-2024 01:35:12pm
இன்ஜினியர்  வீட்டில்65 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் , வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவர் அபுதாபியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில் இவரது மனைவி சுந்தரி (40) தனது இரண்டு குழந்தைகளுடன் வில்லிசேரி கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று இரவு சுந்தரி  வழக்கம்போல வீட்டை பூட்டி விட்டு வீட்டின் ஒரு ரூமில் தூங்கியுள்ளார்.  காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க மரக்கதவு உடைக்கப்பட்டு வீட்டின் மற்றொரு உள் அறையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த லாக்கரில் இருந்த 65 சவரன் தங்க நகைகள் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த சுந்தரி இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து. போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் 

கைரேகை  நிபுணர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். 

வில்லிசேரி கிராமத்தில் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ள பகுதியில் 65 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via