கணவர் குடிப்பழக்கத்தினால் குழந்தையை தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்

by Editor / 12-06-2024 10:44:22am
கணவர் குடிப்பழக்கத்தினால் குழந்தையை தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட மங்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (30). கேட்டரிங் தொழில் செய்து வரும் இவருக்கும், சங்கீதா (25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 9 மாதத்தில் ஆரியன் என்கிற ஆண் குழந்தை உள்ளது.

குடிப்பழக்கத்தினால் தம்பதியினர் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வந்த நிலையில்  மனம் உடைந்த சங்கீதா நேற்று குழந்தையை ஃபேனில் தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கணவர் குடிப்பழக்கத்தினால் குழந்தையை தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்

Share via