நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜாமீன்

by Staff / 09-01-2024 11:13:56am
நடிகர் சுரேஷ் கோபிக்கு ஜாமீன்

பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்ட வழக்கில் பிரபல நடிகரும், பாஜக தலைவருமான சுரேஷ் கோபிக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நீதிபதி சோஃபி தாமஸ் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். சுரேஷை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என மாநில அரசு தெரிவித்ததால், பெஞ்ச் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சில வாரங்களுக்கு முன்பு கேரளாவின் கோழிக்கோட்டில் செய்தியாளர் சந்திப்பின் போது, நடிகர் சுரேஷ் கோபி, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் தோளில் கையை வைத்ததாக தெரிகிறது. தன்னை அவமதித்ததாகவும், தவறான நோக்கத்துடன் தன் மீது கை வைத்ததாகவும் பெண் பத்திரிகையாளர் புகார் அளித்திருந்தார்.

 

Tags :

Share via