கோடையை கொண்டாட செல்லும் மக்களுக்காக கூடுதலாக 500 பேரூந்து. 

by Editor / 28-04-2023 09:09:08pm
கோடையை கொண்டாட செல்லும் மக்களுக்காக கூடுதலாக 500 பேரூந்து. 

தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலை மோதிவருகின்றனர். இதனைத்தொடர்ந்து  அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் 1,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அடுத்தடுத்து வரும் நாட்களில் பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு காரணமாக நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, கூடுதலாக தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, புதுவை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

 

Tags :

Share via