21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

by Editor / 28-11-2023 11:47:56pm
21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, டிசம்பர் ஒன்றாம் தேதி புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் தாமதமாக டிசம்பர் 2ஆம் தேதி  புயல் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Tags : 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

Share via