உத்தர்காண்ட் சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்கள் மீட்பு.- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
உத்தர்காண்ட் மாநில சில்க் யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவித்து இருந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் தீவிர முயற்சியாலும் கடும் போராட்டத்திற்கு பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஸ்கர் சிங் தாமி வரவேற்றதோடு அவர்களது குடும்பத்தினரும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது என்றும் சுரங்கத்திலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்க கடினமாக உழைத்த மீட்பு குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :