மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது.

by Editor / 06-02-2023 10:31:26pm
மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது.

மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது - ரூபாய் 75,000/- மதிப்புள்ள 3 சவரன் தங்க நகை பறிமுதல்.

மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலியன்விளை பகுதியைச் சேர்ந்த தங்கமுத்து மனைவி ராஜாத்தி (90) என்பவர் நேற்று (05.02.2023) அவருடைய வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த கலியன்விளையைச் சேர்ந்த தங்கத்துரை மகன் செல்வராஜ் (41) என்பவர் ராஜாத்தி அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்று கையும் களவுமாக பிடித்துள்ளார்.

இதுகுறித்து ராஜாத்தியின் மகன் பாலசுப்பிரமணியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் வழக்கு பதிவு செய்து   செல்வராஜை கைது செய்து, அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 75,000/- மதிப்பிலான 3 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார்.

 

Tags :

Share via