குருவாயூர் கோவிலில் நாளை 350 திருமணங்கள் நடக்கிறது.

by Editor / 07-09-2024 08:20:49pm
குருவாயூர் கோவிலில் நாளை 350 திருமணங்கள் நடக்கிறது.

விஷேச நாட்களில் குருவாயூர் கோவிலில் அதிக திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று முகூர்த்த நாளான நாளை(8-ந்தேதி) குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் 350 திருமணங்கள் நடக்க உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேி 264 திருமணங்கள் நடந்ததும், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி 277 திருமணங்கள் நடந்ததுமே அதிக திருமணம் நடந்த தினங்களாக இருந்தன.இந்தநிலையில் நாளை 350-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற உள்ளது. மலையாள மாதத்தில் சிங்கம் மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாட்கள் புனிதமான நாட்களாக கருதப்படுகிறது. அது புதுமண தம்பதிகளை அதிகம் ஈர்த்ததன் காரணமாகவே நாளை அதிக திருமணங்கள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
 

 

Tags : குருவாயூர் கோவிலில் நாளை 350 திருமணங்கள் நடக்கிறது.

Share via