ஜூன் 24ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 19-06-2024 02:33:33pm
ஜூன் 24ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து வருகிற ஜூன் 24ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பியுள்ளது. நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் திமுக தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார்.குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஆளும் பாஜக அரசை கண்டித்து திமுக மாணவர் அணிச் சார்பில் வரும், 24ஆம் தேதி காலை 9 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via