போதைப் பொருள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்த பெண் கைது

by Staff / 21-01-2024 02:40:09pm
போதைப் பொருள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்த பெண் கைது

சென்னை தனிப்படை போலீசார் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (20. 1. 2024) திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த சின்னுடு ஒனிச்சி (வயது 48) என்பவர் போதை பொருளை பதுக்கி விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் பதுக்கிய ஒரு கிலோ கொக்கைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் தாம்பரம் அருகே கொக்கைன் போதைப்பொருள் பதுக்கி விற்றதாக நைஜீரியாவைச் சேர்ந்த அமேசியோன் இனாலீகுவே (39) என்ற மற்றொருவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 250 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இருவரையும் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இந்நிலையில், சின்னுடு ஒனிச்சி என்பவரின் மனைவியான எஸ்மிலிசா மிகாஸ் (46) என்பவரை தனிப்படை போலீசார் இன்று (21. 01. 2024) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via