கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

by Staff / 21-01-2024 02:42:46pm
கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

சென்னை முகப்பேர் பாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் துவாரகேஷ் (22). கல்லூரி மாணவரான இவர், தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் துவாரகேசை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த கல்லூரி மாணவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து ஜெ. ஜெ. நகர் போலீசார் விசாரணை நடத்தி கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியதாக அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான விக்னேஷ் (23) மற்றும் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (24) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் முகப்பேர் பகுதியில் தங்களை பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும். பெரிய ரவுடி என தங்களை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக அப்பாவியான கல்லூரி மாணவரை கத்தியால் வெட்டியது தெரிந்தது.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், லோகோஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via