திருமணம் ஆகாத விரக்தி - ஐடி ஊழியர் தற்கொலை

by Staff / 21-01-2024 02:47:33pm
திருமணம் ஆகாத விரக்தி - ஐடி ஊழியர் தற்கொலை

சென்னை திருவல்லிக்கேணி, வாசுதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (29). ஐ. டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அரவிந்தன் உயரம் குறைவாக இருந்ததால் தன்னுடன் வேலை செய்யும் நபர்களுடன் பழகுவதில் சிரமம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அரவிந்தனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், இதற்காக பெண் தேடி வந்தனர். ஆனால் அரவிந்தன் உயரம் குறைவாக இருப்பதால் உறவினர்கள் உள்பட யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த அரவிந்தன், தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via