தப்பியோடிய ரவுடி சுட்டுப் பிடித்த போலீஸ்

by Staff / 28-06-2024 01:34:03pm
தப்பியோடிய ரவுடி சுட்டுப் பிடித்த போலீஸ்

மாம்மல்லபுரம் அருகே பிரபல ரவுடி சீர்காழி சத்யாவை போலீசார் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலதிபரை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக ரவுடியை சுட்டுப் பிடித்ததாக போலீசார் விளக்கம் தெரிவித்துள்ளனர். இந்த ரவுடி சத்யா மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் உள்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via