குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய டூரிஸ்ட் வேன்  கவிழ்ந்து விபத்து

by Admin / 07-07-2024 10:01:22am
குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய டூரிஸ்ட் வேன்  கவிழ்ந்து விபத்து

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய டூரிஸ்ட் வேன்  கவிழ்ந்து 10 க்கும் மேற்பட்டோர்.சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் மரிய ஜெபஸ்டின் இவரது டூரிஸ்ட் வேனில்.பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள்  நேற்று முன்தினம் இரவு குற்றாலம் சென்று விட்டு இன்று காலையில் ஊர் திரும்பும்போது  கோவில்பட்டி அருகேயுள்ள துரைச்சாமிபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் மரிய ஜெபஸ்டியனின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்பு ர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இப் பெரும் விபத்தில் இளைஞர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பினர் இந்த விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓட்டுனர் உறங்கியதே விபத்துக்கு காரணம் எனத் தெரிகிறது.

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய டூரிஸ்ட் வேன்  கவிழ்ந்து விபத்து
 

Tags :

Share via