மலைச்சரிவு மீட்புபணிக்கு சென்ற தமிழக வீரர்கள்.

by Editor / 03-08-2024 11:13:54pm
மலைச்சரிவு மீட்புபணிக்கு சென்ற தமிழக வீரர்கள்.

தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் அவர்கள் உத்தரவுபடி திருநெல்வேலி துணை இயக்குனர் அறிவுத்தலின் படி தென்காசி மாவட்ட அலுவலர் பானுப்பிரியா  ஆலோசனைப்படி கேரள மாநில வயநாடு மலைச்சரிவு வெள்ளம் பாதித்த பகுதிக்கு மீட்பு பணிக்கு தென்காசி நிலையஉதவி மாவட்ட அலுவலர் தலைமையில் கணேசன் வெள்ளை பாண்டியன் கோமதிசங்கர், வின்பிரட்ராஜேந்திரன், செல்வராஜா, சங்கரநாராயணன், கார்த்தி, உள்ளிட்ட சுமார் 10 கமாண்டோ வீரர்கள்  நெல்லை மண்டலத்தில் இருந்து இரு வாகனத்தில் சுமார் 30 பேர் மீட்பு பணிக்கு சென்றனர்.மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மீட்புபணிக்கு தமிழ்நாடு தீயணைப்பு துறைவீரர்கள் சென்றுள்ளனர். 

 

Tags : மலைச்சரிவு மீட்புபணிக்கு சென்ற தமிழக வீரர்கள்.

Share via