சிறையில் இருந்து இந்து அதிரடிப்படை நிறுவனத் தலைவர் விடுதலை
கோவை மத்திய சிறையில் இருந்து இன்று காலை இந்து அதிரடிப்படை நிறுவனத் தலைவர் ராஜகுரு விடுதலை செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ராஜ வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக வெரைட்டி ஹால் ரோடு காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜகுருவுக்கு 2024 ஆம் ஆண்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ராஜகுருவின் விடுதலை குறித்து பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tags :