மினி டெம்போவில் ஓசியில் ஏறி பயணித்து மினி டெம்பாவையே கடத்தி சென்றவர் கைது 

by Editor / 09-09-2024 08:55:25pm
 மினி டெம்போவில் ஓசியில் ஏறி பயணித்து மினி டெம்பாவையே கடத்தி சென்றவர் கைது 

சேலம் எடப்பாடிபகுதியில் வசிக்கும் டிரைவர் ராஜமாணிக்கம் என்பவர்மினி டெம்போவை வாடகைக்கு  ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.கடந்த  7ஆம் தேதி  கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜமாணிக்கம் தனது மினி டெம்போவில் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து சங்ககிரி நோக்கி சென்றுள்ளார். அப்போது எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் செல்லும் பிரதான சாலை பாலத்தின் அருகேநின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான்போர்வெல் வண்டியில் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு சம்பளம் கொடுக்காததால் பள்ளிபாளையம் செல்ல வேண்டும் எனவும் நீங்கள் எதுவரை செல்கிறீர்களோ? அது வரை அழைத்து செல்லுங்கள் என லிப்ட் கேட்டு உள்ளார். 

அந்த இளைஞரை பரிதாபப்பட்டு மினி டெம்போவில் ஏற்றிக்கொண்ட ராஜமாணிக்கம் மற்றொரு அரிசி கடையில் கூடுதலாக அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்காக சாவியை வாகனத்திலேயே விட்டு சென்றபோது மூட்டைகளை தூக்குவதற்கு லிப்ட் கேட்ட இளைஞரும் உதவி செய்துள்ளார். 

பின்னர் வாட்டர்கேன் எடுத்துவர ராஜமாணிக்கம் சென்ற போது லிப்ட் கேட்டு வந்த இளைஞர் அரிசி மூட்டைகளுடன் மினி டெம்போவையை கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எடுத்து சென்று மாயமானார்.

வாட்டர் கேனுடன் ராஜமாணிக்கம் திரும்ப வந்து பார்த்த போது மினி டெம்போ மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலுள்ளவர்களிடம் விசாரித்த போது உடன் வந்தவர் மினி டெம்போவை ஓட்டிச் சென்றதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக எடப்பாடி காவல் நிலையத்தில் ராஜமாணிக்கம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் வாகனத்தை திருடி சென்ற இளைஞர் அரிசியை விற்பனை செய்து விட்டு மகுடஞ்சாவடியில் இருந்து ஆட்டையாம்பட்டி செல்லும் சாலையில் ஒரு பழக்கடையில் மோதி விபத்தை உள்ளார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் வாகன உரிமையாளருக்கு போன் செய்ததை தொடர்ந்து போலீசார் உடன் சென்ற ராஜமாணிக்கம் வாகனத்தை மீட்டு கடத்தி சென்ற மகுடஞ்சாவடியை சேர்ந்த அஜித்குமார் (29) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

லிப்ட் கேட்டு மினி டெம்போவில் ஏறி சென்ற இளைஞர் அந்த டெம்போவையே கடத்தி சென்று தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...

 

Tags :  மினி டெம்போவில் ஓசியில் ஏறி பயணித்து மினி டெம்பாவையே கடத்தி சென்றவர் கைது 

Share via