நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை-நெல்லை எஸ்.பி.விசாரணை.

by Editor / 09-09-2024 09:28:38pm
நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை-நெல்லை எஸ்.பி.விசாரணை.

இராதாபுரம்  ஆத்துக்குறிச்சியில் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாவது மகனுக்கு 3 வயது ஆகிறது. 3 வயது சிறுவன் அங்கன்வாடி மையத்துக்கு செல்வது வழக்கம்.சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்துச்செல்ல தாய் தேடியபோது அவனை காணவில்லை பலஇடங்களில் தேடியும் மகனைக்காணவில்லை இதனைத்தொடர்ந்து விக்னேஷ் மற்றும் ரம்யா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். சிறுவனுக்கு என்ன ஆனது? எங்கே சென்றான் என்ற குழப்பத்தில் இருந்த பொதுமக்களும் பெற்றோரும் தவித்த நிலையில் அதிரடியாக போலீசார் ஒவ்வொரு வீடாக சென்று விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது விக்னேஷ், ரம்யா தம்பதியின் எதிர்வீட்டில் தங்கம்மாள் என்ற பெண் போலீசை கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சிறுவன் கொலைசெய்யப்பட்டு  வாஷிங் மிஷினில் வைத்து சாக்கு பையில் கட்டி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.இதன்தொடர்ச்சியாக அந்தப்பெண்ணை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்திவருகின்றனர்.


 

 

Tags : நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை-நெல்லை எஸ்.பி.விசாரணை.

Share via